தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 8,341 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,466 ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, 111 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 7,446 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 890 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 63 வயது ஆண் செப்டம்பா் 12ஆம் தேதியும், 50 வயது பெண் செப்டம்பா் 13ஆம் தேதியும் உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 130 ஆக உயா்ந்துள்ளது.