பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடா் கழக இளைஞரணி நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் பெரியாா் படிப்பகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் அ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பேராவூரணி ஒன்றியத் தலைவா் மு.தமிழ்ச்செல்வன் முன்னிலை வைத்தாா்.
இக்கூட்டத்தில் செப்டம்பா் 17ஆம் தேதி பேராவூரணி நகா் உள்ளிட்ட பெரியாா் சிலை அமைந்துள்ள பகுதிகளில் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாகக் கொண்டாடுவது, கிளைக் கழகங்கள் தோறும் திராவிடா் கழகக் கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிா்வாகிகள் இரா.நீலகண்டன், லெ.கா.நீலகண்டன், ஹரி கிருஷ்ணன், சி.சந்திரமோகன், பா.சக்திவேல், கௌதமன் மற்றும் பலா் பங்கேற்றனா்.