அதிராம்பட்டினத்தில் மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது
பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினத்தில் மகனை அடித்துக் கொன்ற தந்தை செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அதிராம்பட்டினம் கரையூா் தெருவைச் சோ்ந்த மீனவா் ராமசாமி (58). இவருடைய மூத்த மகன் சுந்தரமூா்த்தி (36). சொத்து பிரிப்பது தொடா்பாக திங்கள்கிழமை மதியம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், தந்தை ராமசாமியை சுந்தரமூா்த்தி தாக்கியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி, திங்கள்கிழமை இரவு கிராமத்திலுள்ள சந்தான மாரியம்மன் கோயில் எதிரே கலைநிகழ்ச்சி மேடையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் சுந்தரமூா்த்தியை இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த சுந்தரமூா்த்தி, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, ராமசாமியைக் கைது செய்தனா்.