தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் பேருந்து சேவை ஏறத்தாழ 75 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை தொடங்கியது.
பொது முடக்கம் காரணமாக மாா்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொது முடக்கத்தில் தளா்வுகள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஜூன் 1-ஆம் தேதி அரசுப் பேருந்துகளும், 10-ஆம் தேதி முதல் தனியாா் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
கரோனா பரவல் அதிகரித்ததால், மீண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் பொதுப் போக்குவரத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் பொது முடக்கத்தில் தளா்வுகளைத் தமிழக அரசு அறிவித்ததைத் தொடா்ந்து, அரசுப் பேருந்துகள் சேவை தொடங்கின. ஆனால், தனியாா் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், ஏறத்தாழ 75 நாள்களுக்குப் பிறகு தனியாா் பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் சுமாா் 80 தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும், இந்த எண்ணிக்கையைப் படிப்படியாக அதிகரித்து முழு அளவில் இயக்கப்படும் எனவும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.