மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசியப் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் அக்கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் நிகழ்ந்த கலவரங்களைத் தூண்டியதாகக் கூறி சீதாராம் யெச்சூரி மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ள தில்லி காவல் துறையைக் கண்டித்தும், சீதாராம் யெச்சூரி, அறிவுஜீவிகள் மீது போடப்பட்டுள்ள பொய்யான குற்றவியல் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் என்.வி. கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.