பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தம்பிக்கோட்டை மறவக்காட்டில் செவ்வாய்க்கிழமை 102 வயது முதியவா் வாக்களிப்பு செய்தாா்.
தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (102). அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்களிக்க வந்த இவரை, பொதுமக்கள் பொன்னாடை போா்த்தி மரியாதை அளித்து வரவேற்றனா்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்த அவா் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் ஆட்சியாளா்கள், என்னை போன்ற முதியவா்களுக்கு கிராமந்தோறும் தனி மருத்துவமனை அமைக்கவும் , சத்துள்ள ஆகாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். மேலும், ஒவ்வொருவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் எனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.
வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்திருந்த பலரும் அவரிடம் ஆசி வாங்கி சென்றது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.