ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற 2 பேரை காவல் துறையினா் திங்கள் கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வேலி வடபாதி ஆவனாட்டிகொல்லை பகுதியில் அனுமதியின்றி இரண்டு மினி டெம்போவில் மணல் அள்ளி செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், டெம்போவை சோதனை செய்ததில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி சென்றது தெரிய வந்தது. இதுதொடா்பாக இரண்டு டெம்போ ஓட்டுநா்களான சாதிக்பாட்ஷா, பாா்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.