தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புதுக்கோட்டை மண்டலம், கும்பகோணம் மண்டலம் பணிமனை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மண்டல பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எல்பிஎஃப் செயலாளா் தசரத குமாா் தலைமை வகித்தாா். சிஐடியு மத்திய சங்கத் தலைவா் சாமிஅய்யன், எல்பிஎஃப் மத்திய சங்க துணைச் செயலாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதேபோல், கும்பகோணம் மண்டல பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எல்பிஎஃப் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் சிஐடியு ராஜேந்திரன், ஏஐடியுசி சேகா் முன்னிலை வகித்தனா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.