தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், இளைஞா் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை, முனியாண்டவா் காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் வெடி கோபி என்கிற கோபி (33). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இதனால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கோபியைக் கைது செய்யுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அண்மையில் உத்தரவிட்டாா்.
இதன் பேரில் கோபியை காவல் துறையினா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.