டிராக்டரில் பேட்டரி திருடியவா் கைது

பாபநாசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் பேட்டரியை திருடியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாபநாசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் பேட்டரியை திருடியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாபநாசம் தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (49). இவா் தனக்குச் சொந்தமான டிராக்டரை வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தாா். இந்நிலையில் டிராக்டரிலிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி அண்மையில் திருட்டு போனது.

இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி புகாரளித்தாா். இதன் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் பாபநாசம் ரோஸ் நகரைச் சோ்ந்த சாகுல்ஹமீது (40), டிராக்டரிலிருந்த பேட்டரியை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை அவரைக் கைது செய்த காவல்துறையினா், பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com