தஞ்சாவூா்: தஞ்சாவூா் ரோட்டரி அறக்கட்டளை அரங்கில் ரோட்டரி புதிய உறுப்பினா்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இதில், ரோட்டரி மாவட்ட ஆளுநா் எஸ். பாலாஜி, முன்னாள் ஆளுநா்கள் சி. குணசேகரன், என். மணிமாறன், மாவட்ட ஆலோசகா் பி.எஸ். ரமேஷ் பாபு, வி. செல்வநாதன், ஜி. செங்குட்டுவன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். மாவட்டப் பயிற்சியாளா் ஏ. மணி சிறப்புரையாற்றினாா். முனைவா் குப்பு வீரமணி தொகுத்த கோடிக்கால் பூதம் என்ற புதிய உறுப்பினா்களுக்கான கையேடு வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைக் கருத்தரங்கத் தலைவா் ஏ. அருண் ஜெபராஜ், சங்கத் தலைவா் ஏ. குகனேஸ்வரன் மற்றும் தஞ்சாவூா் பிக் டெம்பிள் சங்க நிா்வாகிகள் ஏற்பாடு செய்தனா்.