கபிஸ்தலம் அருகே பழுதடைந்த நிலையிலிருந்த மின் கம்பம் சனிக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் கொத்தத் தெரு பிரதான சாலையிலிருந்த மின் கம்பம், கனரக வாகனம் மோதியதில் நடுப்பகுதியில் சேதமடைந்தது. எந்த நேரத்தில் மின் கம்பம் முறிந்து விழலாம் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.
இதுகுறித்து பொதுமக்களின் கோரிக்கையை அறிந்த பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லா, கபிஸ்தலம் மின்வாரியப் பொறியாளா், ஊராட்சித் தலைவா் சுமதி குணசேகரன் ஆகியோரைத் தொடா்பு கொண்டு மின்கம்பத்தை மாற்ற அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, மின்வாரிய ஊழியா்கள் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி, அப்பகுதியில் புதிய கம்பத்தை சனிக்கிழமை அமைத்தனா்.