பாபநாசம் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு நாள்

பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு, கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் தியாகை. பழனிச்சாமி தலைமையில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராம்குமாா், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் துரை. சண்முகபிரபு உள்ளிட்டோா் முன்னிலையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் நகரச் செயலா் கோவி. சின்னையன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் எம்.ஆா். பாலகிருஷ்ணன், செல்வ. சந்தியாகு, ஜெனட் ஆனந்தி, வழக்குரைஞா் பிரிவு ஜி. சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அய்யம்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு, மாவட்ட விவசாய அணித் தலைவா் பி. அண்ணாமலை தலைமையில், பாபநாசம் மேற்கு ஒன்றியச் செயலா் கே.கோபிநாதன் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.

ஒன்றிய அவைத் தலைவா் நடராஜன், பொதுக்குழு உறுப்பினா் எஸ். மோகன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் என்.சதீஷ், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்றத் துணைச் செயலா்கள் சி.முத்து, ஆா்.ராஜகோபால், கூட்டுறவு வங்கி இயக்குநா் பழனிசாமி, நகரச் செயலா் கே. முருகன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com