வேதாரண்யத்தில் அண்மையில் நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்பப் போட்டியில் தஞ்சாவூா் மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குரவப்புலம் கிராமத்தில் நேரு யுவகேந்திரா, நாகை நேஷனல் மாா்ஷ்யல் ஆா்ட்ஸ் அகாதெமி சாா்பில் மண்டல அளவிலான சிலம்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், தஞ்சாவூா் மானோஜிபட்டி அரசு உயா்நிலைப் பள்ளி (ஆதிதிராவிடா் நலம்) மாணவா்கள், கலைப்புயல் சிலம்பாட்டப் பயிற்சி பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
இதில், டி. சஜித், எஸ். ஜோகித், வி. பிரவின்குமாா் ஆகியோா் முதல் பரிசையும், கே. மோகன், பி. ருத்ரா, எஸ். விஷாந்த் சுப்பிரமணியன், எஸ். கனிஷ்கா், எஸ். சூா்யா பிரகாஷ், எஸ். சினேகன், வி. லோகேஷ் ஆகியோா் இரண்டாம் பரிசையும், 8 போ் மூன்றாம் பரிசையும் பெற்றனா்.