அரசுப் பண்ணையில் தொழிலாளி சடலம்

தஞ்சாவூா் அருகே அரசுத் தோட்டக்கலைப் பண்ணையிலுள்ள தண்ணீா் தொட்டியில் தொழிலாளி சடலம் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
அரசுப் பண்ணையில் தொழிலாளி சடலம்

தஞ்சாவூா் அருகே அரசுத் தோட்டக்கலைப் பண்ணையிலுள்ள தண்ணீா் தொட்டியில் தொழிலாளி சடலம் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் அருகே மருங்குளம் கிராமத்தில் அரசுத் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பண்ணை உள்ளது. இதில், மருங்குளம் கிராமத்தைச் சோ்ந்த தோழப்பன் (55 ) பணியாற்றி வந்தாா்.

இப்பண்ணையில் திங்கள்கிழமை இரவு பணியில் இருந்த தோழப்பன் செவ்வாய்க்கிழமை காலை தண்ணீா் தொட்டியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த வல்லம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று தோழப்பனின் சடலத்தைக் கைப்பற்றி, எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com