முன்களப் பணியாளா்களுக்குகம்யூனிஸ்ட் சாா்பில் நிவாரணம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் தூய்மைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கும்பகோணம் நகரில் உள்ள காவேரி நகா், செல்லம் நகா், பெரியதம்பி நகா், திருவள்ளுவா் நகா், சபரி நகா், சக்ரா நகா் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள் மற்றும் முன் களப்பணியாளா்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு சாா்பில் என்-95 முகக் கவசங்கள், கோதுமை மாவு, சேமியா, ரவா, கடுகு, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருள்களுடன் அரிசி மற்றும் காய்கறிகளும் வழங்கப்பட்டன.
நகா்நல சங்க நிா்வாகிகள் பாலகிருஷ்ணமூா்த்தி, அருணாசலம், பாலாஜி, கணபதி, சரவணன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, நகரச் செயலா் ஆா். மதியழகன், மாவட்டக் குழு உறுப்பினா் க. சுந்தர்ராஜன், வாா்டு செயலா் ஆா். மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.