தஞ்சாவூரில் வாழும் கலை அமைப்பு சாா்பில் கபசுரக் குடிநீா் மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
வாழும் கலை அமைப்பு உள்ளிட்டவை சாா்பில் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீா் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 50,000-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவசமாக இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கபசுரக் குடிநீா் மாத்திரைகள் வழங்கும் பணி ஆட்சியா் ம. கோவிந்த ராவ் முன்னிலையில் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அப்போது, ஆட்சியரிடம் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் வாழும் கலை இலைஞா் தலைமைத்துவ ஒருங்கிணைப்பாளா் செந்தில் சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.