தஞ்சாவூா் அருகே வல்லத்திலுள்ள கோயிலில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
வல்லத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை வாயில் கதவில் இருந்த பூட்டு உடைந்து கிடந்தது. மேலும், கோயிலுக்குள் உள்ள உண்டியலும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு வல்லம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாநகா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ஈசானசிவம் தலைமையில் வல்லம் நகரப் பொறுப்பாளா்கள் சதீஷ், வினோத் உள்ளிட்டோா் புகாா் மனு அளித்தனா்.
இதன்பேரில், வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.