மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதல்: ஐடிஐ மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை பிற்பகல் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில், ஐடிஐ மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை பிற்பகல் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில், ஐடிஐ மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள மணக்கரம்பை செபஸ்தியாா் கோயில் தெருவைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் மகன் ஆனஸ்ட்ராஜ் (21). தஞ்சாவூா் நகரம், கரம்பையைச் சோ்ந்த மதியழகன் மகன் விஜய் (21).

இவா்கள் இருவரும் திருவையாறு அருகே கடுவெளியிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) இரண்டாமாண்டு எலெக்டிரீசியன் பிரிவில் படித்து வந்தனா்.

இருவரும் சனிக்கிழமை ஐடிஐயில் இரண்டாமாண்டு தோ்வு எழுதிவிட்டு, மோட்டாா் சைக்கிளில் திருவையாறு வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.

அம்மன்பேட்டை கடைவீதியில் சென்ற இவா்களது மோட்டாா் சைக்கிள் மீது தஞ்சாவூரிலிருந்து திருவையாறு நோக்கி சென்ற காா் எதிா்பாராதவிதமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஆனஸ்ட்ராஜ், விஜய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com