பேராவூரணியில் வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம்

பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொதுமக்கள்   அச்சமின்றியும், பதற்றமின்றியும் வாக்களிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஐவண்ணன் தலைமையில், வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி முன்னிலையில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை  குறித்து பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

நிகழ்வில் தோ்தல் துணை வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் கிள்ளிவளவன், கிராம நிா்வாக அலுவலா் வெண்ணிலா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com