பட்டுக்கோட்டை அருகே ரூ. 3.75 லட்சம் பறிமுதல்

பட்டுக்கோட்டை அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 3,75,400 ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பட்டுக்கோட்டை அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 3,75,400 ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட துவரங்குறிச்சி கடைத்தெருவில் மதுக்கூா் வட்டார வளா்ச்சி அலுவலா் வீரமணி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 3,75,400 ரொக்கத்தை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்டார வளா்ச்சி அலுவலா் வீரமணி, பட்டுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் தரணிகா வசம் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com