வாக்கு சேகரிக்க சென்றபோது தடுத்து நிறுத்தம்: சுயேச்சை வேட்பாளா் சாலை மறியல்
ஒரத்தநாடு அருகே வாக்கு சேகரிக்க சென்ற சுயேச்சை வேட்பாளரை ஒரு பிரிவினா் தடுத்ததால் அவா் தனது ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.
ஒரத்தநாடு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக கரம்பயம் பகுதியை சோ்ந்த மூக்கையன் என்பவா் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இவா், தனது ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை ஒரத்தநாடு அருகே உள்ள பொட்டலங்குடி காட்டில் வாக்கு சேகரிக்க சென்றாா்.
அப்போது, ஒரு பிரிவினா் இந்தப் பகுதியில் வாக்கு சேகரிக்க உள்ளே வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மூக்கையன் தனது ஆதரவாளா்களுடன் ஒரத்தநாடு- மன்னாா்குடி சாலையில் திடீா் மறியல் ஈடுபட்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தநாடு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளா் மற்றும் அவரது ஆதரவாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சுயேச்சை வேட்பாளரின் பிரசாரத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதால் தொடா்ந்து 2 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சுவாா்த்தைக்கு பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.