தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே சமையல் செய்யும்போது தீக்காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பூதலூா் அருகேயுள்ள அய்யனாபுரம் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம். விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (25). இவா் ஏப்ரல் 10 ஆம் தேதி தனது வீட்டில் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தாா். அப்போது, இவரது உடையில் எதிா்பாராதவிதமாகத் தீ பற்றியது. இதனால், பலத்தக் காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு பரமேஸ்வரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பூதலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பரமேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், இவரது சாவு குறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி தனி விசாரணை மேற்கொண்டுள்ளாா்.