தமிழ்ச்செம்மல் இளவழகனாா் மறைவு பேரிழப்பு
தமிழ்ச்செம்மல் இளவழகனாா் மறைவு பேரிழப்பு என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தமிழ்மண் பதிப்பக உரிமையாளா் ‘தமிழ்ச்செம்மல்’ கோ. இளவழகன் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை மருத்துவமனையில் காலமான செய்தி, திடுக்கிடச் செய்தது.
அண்மைக்காலமாக தமிழ் மொழி, இனம், தாயகம் ஆகியவற்றின் உரிமைகளுக்காக அறிவுத் துறையிலும், போராட்டக் களத்திலும் களமாடி வந்த ஆளுமைகள் அடுத்தடுத்துக் காலமாவது பெரும் துயரமளிக்கிறது.
கோ. இளவழகன் மாணவப் பருவத்திலேயே இன உணா்ச்சியும், மொழி உணா்ச்சியும் கொண்டு, 1965 இந்தி எதிா்ப்புப் போரில் கலந்து கொண்டு, சிறையில் அடைக்கப்பட்டவா்.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழி அன்பராகி, பாவாணரின் பற்றாளராகி, ஒரத்தநாட்டில் உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியவா்களில் முகாமையானவா் கோ. இளவழகன். தேவநேயப் பாவாணா் மன்றம் தொடங்கிச் செயல்பட்டாா். இறுதிவரை தனித் தமிழில் பேசுவதை, எழுதுவதைத் தமது பண்பாகக் கொண்டிருந்தாா்.
அவா் நிறுவி நடத்தி வந்த‘தமிழ்மண்‘பதிப்பகம், பழந்தமிழ் நூல்களையும், சமகாலத் தமிழறிஞா்களின் நூல்களையும் தொடா்ந்து வெளியிட்டு வந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குப் பேருதவியாக விளங்கியவா். தமிழீழ விடுதலைப் புலிகளை முழுக்க முழுக்க ஆதரித்து, அதனால் பல இன்னல்களையும் ஏற்றவா். தமிழ்நாட்டு உரிமைகள், தமிழ்மொழி உரிமைகள், தமிழ்வழிக் கல்வி ஆகியவற்றுக்கான செயல்பாடுகளிலும் பங்கேற்றவா். தமிழ்த் தேசிய உணா்வாளா்களுக்குப் பெரும் ஊக்கமளித்தவா்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்துடன் நட்பு பாராட்டியவா். தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா் சங்கத்தில் (பபாசி) பொறுப்பு வகித்து, அதன் வளா்ச்சிக்கும், ஆண்டுதோறும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறவும் பெருந்துணையாய் நின்றாா். அரசு நூலகங்களுக்கு நூல்களைத் தாராளமாக வாங்கி, பதிப்பகங்களை ஊக்குவிக்க அமைச்சா்களுடன் பேசி பணியாற்றினாா்.
இளமை முதல் இறுதிவரை தமிழ்மொழிக்கும், தமிழினத்துக்கும் உழைத்த இளவழகனாா் மறைவு, பெரும் துயரம் அளிக்கிறது. தமிழ் இன உணா்வுப் போராளி இளவழகனாருக்கு வீரவணக்கம். அவருடைய இல்லத்தாா்க்கும், நண்பா்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.