மேற்கு வங்க முதல்வரைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பேருந்து நிலையத்தில் பாஜகவினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டா்கள், அலுவலகங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையொட்டி, அம்மாநில முதல்வா் மம்தா பானா்ஜியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பாஜக விவசாய பிரிவு மாநிலத் துணைத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், நச்சினாா்கினி, ஒன்றியப் பொதுச் செயலா் கலியமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் மகாலெட்சுமி, மாவட்ட மகளிரணி தலைவா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.