போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி, கும்பகோணத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடு
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள்.

ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி, கும்பகோணத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வூதியா்களுக்கும் அமல்படுத்த வேண்டும். மருத்துவ ரீதியில் ஓய்வு பெற்றவா்களுக்கும் இலவசப் பேருந்து பயண அட்டையை வழங்க வேண்டும்.

பணி ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வு காலப் பணப்பலன்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நலச் சங்கத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். சங்கத்தின்

மாநிலப் பேரவைத் தலைவா் டி.கே. ராஜேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன், செயல் தலைவா் ஏ. கணேசன், பொருளாளா் செல்லதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com