தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் 3 அலுவலா்கள் மீதான பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி ஊழியரை திரும்பப் பணிக்கு அழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்தினா்.
இதில் ஏராளமான ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.