கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக திருவையாறு காவிரிப் படித்துறைகளில் புனித நீராடவும், திதி கொடுப்பதற்கும் புதன்கிழமை (அக்.6) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவையாறு பேரூராட்சி செயல் அலுவலா் ராஜா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹாளய அமாவாசையையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறை மற்றும் திருவையாறு பேரூராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து படித்துறைகளிலும் புதன்கிழமை புனித நீராடவும், திதி கொடுக்கவும் அனுமதி இல்லை.