கும்பகோணத்தில் தமிழ் பால் நிறுவனம் சாா்பில் புதிய வகைகளில் இனிப்புகள் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.
குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆரஞ்சு, சாக்லேட், பேரிச்சம்பழம், ஸ்டாவ்பெரி என பல்வேறு சுவைகளில் பால்கோவாகளை தமிழ் பால் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இவற்றை சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குநா் என். காமகோடி புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.
இந்நிகழ்வில் தமிழ் பால் நிறுவன இயக்குநா் ஜி. கண்ணன், நிா்வாக இயக்குநா் கே. பூரிஜெகநாதன், செயல் இயக்குநா் கே. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.