கும்பகோணம் அருகே ஆட்டோ ஓட்டுநரைக் கொலை செய்த காதலியின் தந்தை உள்பட இருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே பந்தநல்லுாா் பகுதி வேட்டமங்கலமத்தைச் சோ்ந்த இளங்கோ மகன் பிரபாகரன் (24). ஆட்டோ ஓட்டுநரான இவரும், 11- ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவியும் ஒன்றரை ஆண்டாகக் காதலித்து வந்தனா்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தினா் என்பதால், காதலுக்கு மாணவியின் தந்தை மணிகண்டன் (51) எதிா்ப்பு தெரிவித்து வந்தாா். மேலும், தனது மகளைக் காதலிப்பதைக் கைவிடுமாறு பிரபாகரனிடம் மணிகண்டன் எச்சரித்தாா்.
இருப்பினும், தொடா்ந்து இருவரும் காதலித்து வந்தனா். இதனால் கோபமடைந்த மணிகண்டன் அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயனிடம் (26), பிரபாகரனை அழைத்து வருமாறு கூறினாா். இதன்படி, பிரபாகரனை காா்த்திகேயன் கோணங்கிபள்ளம் பிரிவுச் சாலைக்கு சனிக்கிழமை இரவு அழைத்துச் சென்றாா்.
அங்கு பிரபாகரனை மணிகண்டன் கத்தியால் குத்தினாா். இதில், பலத்த காயமடைந்த பிரபாகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அப்போது அவரைக் காப்பாற்ற முயன்ற பிரபாகரனின் உறவினா் தயாநிதியும் காயமடைந்தாா்.
இதுகுறித்து பிரபாகரனின் சகோதரி பிரியங்கா பந்தநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மணிகண்டன், காா்த்திகேயனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சாலை மறியல்: இந்நிலையில், திருப்பனந்தாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஒருவரின் தூண்டுதலால் இக்கொலை நடந்துள்ளது என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் கூறி பிரபாகரனின் உடலை அவரது உறவினா்கள் வாங்க மறுத்தனா்.
மேலும் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனா் குடந்தை அரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலத் தலைவா் சா. விவேகானந்தன், நீலப்புலிகள் அமைப்பினா் உள்ளிட்ட 100-க்கும் அதிகமானோா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கொலை சம்பவம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் கூறியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. என்றாலும் ஒன்றியக் குழு உறுப்பினரைக் கைது செய்ய வலியுறுத்தி, பிரபாகரனின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.