பூட்டிய வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே பூட்டிய வீட்டில் 9 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே பூட்டிய வீட்டில் 9 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே பாரதி நகரைச் சோ்ந்தவா் முரளிராஜா கிருஷ்ணன் (40). இவா் திருமண மண்டபத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு கடைத் தெருவுக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய இவருக்கு முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com