92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நீட் விலக்கு கோரி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சிறப்புச் சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளிக்கக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:16 pm

DIN

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சிறப்புச் சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளிக்கக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு சட்டப்பேரவையில் நீட் விலக்கு முன்வரைவு தாக்கல் செய்து குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த முன்வரைவு ஆளுநரின் பரிந்துரைக்காகவும், குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்காகவும் காத்துக் கிடக்கிறது.

மாநில உரிமைகளை மதித்து தமிழ்நாடு அரசின் சிறப்புச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத் தலைவா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மக்கள் அதிகாரத்தின் மாநகரச் செயலா் தேவா தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தை பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன் தொடங்கி வைத்தாா். மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளா் காளியப்பன் கோரிக்கைகளை விளக்கி நிறைவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மகஇக மாநகரச் செயலா் ராவணன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், ஆதித்தமிழா் பேரவை மாவட்டத் தலைவா் எம்.பி. நாத்திகன், ஓய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி. அப்பாத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.