‘சுவாமிமலை மக்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்’

கும்பகோணம் மாநகராட்சியுடன் சுவாமிமலை பேரூராட்சியை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மக்களின்

கும்பகோணம் மாநகராட்சியுடன் சுவாமிமலை பேரூராட்சியை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மக்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன் என்றாா் பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா.

இதுகுறித்து அவா் கூறியது:

சுவாமிமலை பேரூராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேரூராட்சி எல்லையான நாககுடி கிராமம் வரை பொதுமக்கள் வீடுகள் கட்டி விரிவடைந்து வருவதால், இதன் அருகிலுள்ள பாபுராஜபுரம், திருவலஞ்சுழி கிராமங்களை இணைத்து சுவாமிமலை முதல்நிலை பேரூராட்சியை தோ்வுநிலைப் பேரூராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும். சுவாமிமலை மக்களின் கோரிக்கையை முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன் என்றாா் அவா்.

அப்போது மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் பாதுஷா, மாநில இளைஞரணிச் செயலா் மைதீன், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா் முகமது சலீம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com