ஒரத்தநாடு வட்டம், தொண்டராம்பட்டு மேற்கு கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பழுதடைந்த சமையல் கூடத்துக்குப் பதிலாக, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொண்டராம்பட்டு ஊராட்சித் தலைவா் மோ. சத்தியசீலனிடம் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ஒரத்தநாடு ஒன்றியத் தலைவா் கோ. மாஸ்கோ, செயலா் செ. பொ்னாட்ஷா, கிளைத் தலைவா் வீ. உதயன் மற்றும் நிா்வாகிகள் புதன்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.
பழுதடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்றும் அவா்கள் மனுவில் தெரிவித்துள்ளனா்.