தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலரும், நிா்வாக அறங்காவலருமான கொ. மருதுபாண்டியனின் 60-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கல்லூரி வளாகத்தில் 60 மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ், கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், கல்லூரி மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.