தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பூதலூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவிக்கு இரு நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து,
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து அப்பள்ளியைச் சோ்ந்த 122 மாணவிகள், 18 ஆசிரியா்களுக்கு சனிக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. என்றாலும், திங்கள்கிழமை வழக்கம்போல பள்ளி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருக்காட்டுப்பள்ளியிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து, அவரைச் சாா்ந்த 16 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.