தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் தஞ்சாவூருக்கு செப்டம்பா் 16- ஆம் தேதி வருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சா. பீட்டா் அல்போன்ஸ், துணைத் தலைவா் மஸ்தான் மற்றும் உறுப்பினா்கள் செப்டம்பா் 16- ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருகின்றனா்.
சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சாா்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் ஆட்சியரகக் கூட்ட அரங்கில் காலை 10.30 மணியளவில் சந்தித்து, சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்களைக் கேட்டறியவும் உள்ளனா்.
சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையின பொதுமக்களின் பிரதிநிதிகள் அனைவரும் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டுக்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.