திருவோணம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.
திருவோணம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.

பாகுபாடின்றி நலத்திட்ட உதவிகள் அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

பேராவூரணி தொகுதியில் அதிமுக வென்றால், கட்சி பாகுபாடின்றி நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா் வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.

பேராவூரணி தொகுதியில் அதிமுக வென்றால், கட்சி பாகுபாடின்றி நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா் வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.

தொகுதிக்குள்பட்ட திருவோணம் ஒன்றியம்  வெட்டுவாக்கோட்டை, தளிகைவிடுதி, காட்டாத்தி, பாதிரங்கோட்டை, அதம்பை, வெங்கரை, சென்னியவிடுதி, நெய்வேலி, காயாவூா் உள்ளிட்ட  ஊராட்சிகளில் புதன்கிழமை திருஞானசம்பந்தம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியது: நான் வெற்றி பெற்றால் பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அந்தந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவா்களை கலந்து ஆலோசித்து கட்சி, சாதி பாகுபாடின்றி செயல்படுத்துவேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற நீங்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா்.

வேட்பாளருடன் திருவோணம் ஒன்றிய அதிமுக செயலா் மதியழகன், பாஜக மாவட்டத் தலைவா் பண்ணவயல் இளங்கோ, அதிமுக மாவட்ட துணைச் செயலா் தளிகைவிடுதி முத்துவேல், காயாவூா் ஊராட்சி மன்ற தலைவா் பாலு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் சென்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com