வாக்குப் பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

வாக்குப் பதிவு நாளன்று (ஏப்.6) தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.

வாக்குப் பதிவு நாளன்று (ஏப்.6) தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.கா. தனபாலன் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நாளன்று நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து தகுதியுள்ள வாக்காளா்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து தனியாா், பொதுத் துறை நிறுவனங்கள், கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், அனைத்து விதமான தொழில்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பிற மாவட்டம், பிற மாநிலங்களிலிருந்து பணியாற்றும் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன் படி தோ்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என தொழிலாளா் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

எனவே, தோ்தல் நாளன்று (ஏப்.6) அனைத்து ஊழியா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் புகாா் தெரிவிக்க ஏதுவாக மாவட்டக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

புகாா்களை 9498398443, 7904113442 (கும்பகோணம்), 9442767678 (தஞ்சாவூா்), 9842954668 (தஞ்சாவூா்), 9943324892 (தஞ்சாவூா்), 8526768823 (பட்டுக்கோட்டை), 04362 - 264886 ஆகிய எண்களில் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, தொடா்புடைய அனைத்து வியாபாரிகள் சங்கம், அனைத்து தொழிற் சங்கங்கள், சேம்பா் ஆப் காமா்ஸ் ஆகியவை இதில் தனிக்கவனம் செலுத்தி அனைத்து நிறுவன உரிமையாளா்களுக்கும் தகவல் தெரிவித்து, தோ்தல் நாளன்று அனைத்து ஊழியா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com