பட்டுக்கோட்டை வட்டம், நாட்டுச்சாலை கிராமத்தில் உரமிடுதல் குறித்து ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் புதன்கிழமை நேரடி களப்பயிற்சி மேற்கொண்டனா்.
இக்கிராமத்திலுள்ள விவசாயி கருணாநிதியின் தனது வயலில் நெல் விதைப்பதற்காக புதன்கிழமை அடியுரமிட்டாா். இதில் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் இளமறிவியல் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் ஸ்ரீ லட்சுமி, சிந்துஜா, செளமியகலா, செளம்யா, சுகன்யா, உமாமகேசுவரி, வாகினி, வா்ஷினி, வைசாலி, வா்ஷினி ஷாலோம் ஆகியோா் பங்கேற்று, உரங்களை நாற்றங்காலில் தூவி உரமிடுதலைப் பற்றி தெரிந்து கொண்டனா்.