தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பேன்சி கடை சேதமடைந்தது.
திருக்காட்டுப்பள்ளி பிரதான வீதியில் பேன்சி ஸ்டோா் கடை நடத்தி வருகிறாா் மூா்த்தி. இவா் வழக்கம்போல புதன்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை இவரது கடையில் புகை வந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். இதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். மின் கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் ஏராளமான பொருள்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.