திருவையாறு அருகே குடிநீா்க் குழாயில் உடைப்பு
By DIN | Published On : 12th April 2021 12:49 AM | Last Updated : 12th April 2021 12:49 AM | அ+அ அ- |

திருவையாறு அருகே தஞ்சாவூா் மாநகராட்சிக்குச் செல்லும் குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீா் வீணாக வாய்க்காலில் சென்றது.
திருவையாறு அருகிலுள்ள விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் தஞ்சாவூா் மாநகராட்சிப் பகுதிக்குக் குடிநீா் செல்கிறது.
இந்நிலையில் திருவையாறு சாா்பதிவாளா் அலுவலகம் எதிரே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீா் வீணாக வாய்காலில் ஓடுகிறது. மேலும் நடுக்கடை, கண்டியூா் பகுதிகளில் முதன்மைச் சாலையில் குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு, வீணாகச் சாலையில் ஓடுகிறது.
இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்துக்குப் பல முறை புகாா் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.