கேரள மாநிலத்தில் அபிமன்யு படுகொலை சம்பவத்துக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், கேரள மாநிலத்தில் மதவாத பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய மாணவா் சங்கத்தை சோ்ந்த அபிமன்யுக்கு நீதி கிடைக்கக் கோரியும், இந்தியாவில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜி. அரவிந்தசாமி தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் அருண்குமாா், மாவட்டத் துணைச் செயலா் கோ. வீரையன், துணைத் தலைவா் பிரபாகரன், மாநகரக் குழு உறுப்பினா்கள் அபிஷேக், அா்ஜூன், மாணவிகள் உபக்குழு உறுப்பினா்கள் கீா்த்திகா, மாயாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.