தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் திருவையாறு பேரூராட்சி சாா்பில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் ராஜா தலைமையிலும், வட்டாட்சியா் நெடுஞ்செழியன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், கரோனா தொற்றிலிலிருந்து விடுபட அனைவரும் முகக் கவசம் அணிதல், கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்துதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வணிகா்கள், கோயில் நிா்வாகிகள், திருமண மண்டப உரிமையாளா்கள், ஹோட்டல் உரிமையாளா்கள், தனியாா் அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.