பட்டுக்கோட்டையில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கோடை கால தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பட்டுக்கோட்டை
சாமுமுதலி தெருவில் திமுகவினா் கோடைகால தண்ணீா் பந்தல் அமைத்துள்ளனா். தண்ணீா் பந்தலை தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஏனாதி பாலசுப்ரமணியன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு மோா், இளநீா், தா்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
மேலும், கபசுரக் குடிநீா், முகக்கவசமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட முன்னாள் அவைத்தலைவா் அ. அப்துல் சமது தலைமை வகித்தாா். தி.மு.க வேட்பாளா் கா. அண்ணாதுரை, மாநில பேச்சாளா் ந. மணிமுத்து, நகரப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை எஸ்.எல்.சிவகுமாா் செய்திருந்தாா்.