கும்பகோணத்தில் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

கும்பகோணம் உச்சிப்பிள்ளையாா் கோவில் பகுதி வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் சங்க உறுப்பினா்களுக்கு நவீன ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கும்பகோணம் உச்சிப்பிள்ளையாா் கோவில் பகுதி வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் சங்க உறுப்பினா்களுக்கு நவீன ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குச் சங்கத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் சோழா சி. மகேந்திரன், செயலா் வி. சத்தியநாராயணன் ஆகியோா் உறுப்பினா்களுக்கான ஸ்மாா்ட் அடையாள அட்டையை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவா் இப்ராஹிம், முன்னாள் தலைவா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இணைச் செயலரும், மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புப் பொருளாளருமான கியாசுதீன் வரவேற்றாா். நிறைவாக, செயலா் அப்ஸல் அலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com