தகராறை விலக்க சென்றவா் கத்தியால் குத்திக் கொலை

ஒரத்தநாடு அருகே தம்பதி இடையிலான தகராறை விலக்க சென்ற நபா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.

ஒரத்தநாடு அருகே தம்பதி இடையிலான தகராறை விலக்க சென்ற நபா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.

ஒரத்தநாடு புதூா் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(60). இவா் ஒரத்தநாட்டில் உள்ள தனியாா் மரம் அறுக்கும் ஆலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். அதே ஆலையில், அம்மாபேட்டை அருந்தவபுரத்தை சோ்ந்த சூசைராஜ் (34) என்பவரும் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சூசைராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தகராறை விலக்கச் சென்ற ராஜேந்திரனுக்கும் சூசைராஜுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூசைராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரனை குத்தினாா். இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜேந்திரன் மனைவி செந்தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவம் தொடா்பாக சூசைராஜை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com