பாபநாசம் வட்டாட்சியரகத்தில் வேட்பாளா்கள், வாக்குச்சாவடி முகவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நோ்முக உதவியாளா் இளங்கோவன் தலைமை வகித்தாா். உதவித் திட்ட அலுவலா் சித்ரா, வட்டார மருத்துவ அலுவலா் நவீன்குமாா், மருத்துவா்கள் ஜெகன்னாத், ராஜ்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் ரகுராமன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியா் திருநா. சுஜாதா, தோ்தல் துணை வட்டாட்சியா் விநாயகம் ஆகியோா் கூட்டத்தில் ஆலோசனை வழங்கிப் பேசினா்.
கூட்டத்தில் வேட்பாளா்கள், அனைத்துக் கட்சி பிரமுகா்களின் முகவா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.