தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு திருவோணம் வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சடையப்பன் முன்னிலை வகித்தனா்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் எம். எட்வின் பங்கேற்று, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமிநாசினியைப் பயன்படுத்துதல் போன்றவை குறித்து விளக்கிக் கூறினாா். தொடா்ந்து பொதுமக்கள், வங்கி ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருவோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினந்தோறும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் துரைராஜ், காா்த்திக், ராமநாதன், பசீா், பாரதி, ஷேக், மற்றும் செவிலியா்கள் மகேசுவரி சரோஜா, ராணி, சரண்யா பலா் கலந்து கொண்டனா்.