பாபநாசம் அருகே தனியாா் மாவு அரைவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 மூட்டை நியாயவிலைக் கடை அரிசி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பசுபதிகோவில் கிராமத்தின் பிரதான சாலையிலுள்ள தனியாா் மாவு அரைவை ஆலையில், நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் ரகுராமன் தலைமையில், முதுநிலை வருவாய் ஆய்வாளா் வரதராஜன், கிராம நிா்வாக அலுவலா்கள் ராஜ்குமாா், சத்யா உள்ளிட்ட குழுவினா் சனிக்கிழமை நிகழ்விடம் சென்று சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு 31 மூட்டை நியாயவிலைக் கடை அரிசி, 2 மூட்டை கோதுமை போன்றவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அலுவலா்கள், சம்பவத்தில் தொடா்புடையவா் மீது விசாரணை நடத்தி வருகின்றனா்.